திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும், மத்திய வருவாய் சுங்க துறையினரும் சோதனை செய்தனர். மலேசியாவில் வந்த இரண்டு பேர் உடலில் மறைத்து 5 ஆயிரத்து 461 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று, சென்னையை சேர்ந்த சாதிக் என்பவர் 318 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர்.

Exit mobile version