விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. மலேசியாவிலிருந்து திருச்சி வந்த  பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவை  சேர்ந்த ஃபெலிசியா தாஸ் விக்டர் என்ற பெண்மணி  தனது  உடைமையில் 1040  கிராம் தங்கச்சங்கிலியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகையை  பறிமுதல் செய்த காவல்துறைஅதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்

Exit mobile version