தற்போது வரை 212 கிலோ தங்கம் பறிமுதல்- தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 1601 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், நடைபெற உள்ள தேர்தலுக்கு, தற்போது வரை 1601வேட்பு மனுக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 46 கோடியே 29லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 212 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version