துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 26 லட்ச ரூபாய் மதிப்புடைய 750 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொம்மை காருக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த 2 பயணிகளை அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல், மேலும் மூவரிடம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தையும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

Exit mobile version