வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 673 கிராம் தங்கத்தினை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளி நாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது இலங்கை கொழும்புவிலிருந்து வந்த இளங்கேஸ்வரன் என்பவரிடமிருந்து 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 283 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினர். மேலும் துபாயிலிருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடமிருந்து 12 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 390 கிராம் மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சுங்கத்துறை இலாக்கா அதிகாரிகள் இவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Exit mobile version