நகைக்கடைக்கு கொண்டுசென்ற ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற வேன் ஒன்றை சோதனை செய்ததில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. அண்ணா நகரில் செயல்படும் பிரபல நகைக் கடையில் இருந்து எடுத்து வரப்பட்ட தங்கத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அடங்கிய பெட்டிகளை சீல் வைத்து தாம்பரம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது .

Exit mobile version