News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் – தமிழ்நாடு அரசு அதிரடி

Web Team by Web Team
November 21, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் – தமிழ்நாடு அரசு அதிரடி
Share on FacebookShare on Twitter

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை இயற்றியதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டே 313 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 92 பல் மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, Post Matric கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த, உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை, கடந்த 18ம் தேதி நடைபெற்ற விழாவில் தாம் அறிவித்திருந்ததை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.

கலந்தாய்வில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள மாணவர்களின், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

கல்விக் கட்டணத்தை, உதவித்தொகை அனுமதி வரும் வரை காத்திராமல், உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் ஒரு
சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த நிதியில் இருந்து மாணாக்கர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அ.தி.மு.க. அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும் என்று தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து அவர்களின் மருத்துவர் கனவினை நனவாக்கி, சம நீதியை நிலைநாட்டி, வரலாற்றுச் சாதனை படைத்த அதிமுக அரசு, ஏற்கனவே தாம் அறிவித்தவாறு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அனைவரும் அறிவர் என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என்று தெரிந்த பின்பும், தி.மு.க. உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags: 7.5% உள் இடஒதுக்கீடுஅரசுப்பள்ளி மாணவர்கள்எடப்பாடி பழனிசாமிகல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்கல்விக் கட்டணம்தமிழ்நாடு அரசுதனியார் மருத்துவக் கல்லூரிதிமுக அரசியல் நாடகம்
Previous Post

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா!

Next Post

அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் – முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அறிவிப்பு

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
TopNews

இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
Next Post
அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் – முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அறிவிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் - முதலமைச்சர், துணைமுதலமைச்சர் அறிவிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version