News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

Web Team by Web Team
July 7, 2021
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
Share on FacebookShare on Twitter

மக்கள் நலனே நமது குறிக்கோள் ! தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைந்த கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மக்கள் நலனே நமது குறிக்கோள் ! தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைந்த கூட்டணி தொடர்கிறது. கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு! தமிழ் நாட்டில் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடத்திய பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது. கழகத்தின் மக்கள் தொண்டில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொண்ட பல்வேறு அமைப்புகளும், தோழமை இயக்கங்களும் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தன.தொடர்ந்து பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் எதிர்காலம் சிறக்கவும் எண்ணற்ற பணிகளை ஆற்றியது. இந்தப் பணிகளுக்கெல்லாம் பாராட்டு தெரிவிப்பதுபோல, தமிழ் நாட்டு வாக்காளர்கள் அளித்த பேராதரவு காரணமாக 75 சட்டமன்ற உறுப்பினர்கள் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களாக இன்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். வெறும் 3 விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில்தானே கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழந்திருந்தாலும், மக்களின் பேரன்பு கழகத்திற்குதொடர்கிறது. தேர்தல் முடிவுகள் சற்றே தொய்வையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும், கொண்ட கொள்கையின் காரணமாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது நாம் கொண்ட விசுவாசம் காரணமாகவும், கழகத் தோழர்களின் பொது வாழ்வு என்னும் புனிதப் பயணம் வீருநடை போடுகிறது. இப்பொழுது நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நம் முன் அணிவகுத்து நிற்கின்றன. அரசியல் வாழ்வு என்பதே இடைநிற்றல் இல்லாத லட்சியப் பயணம் தானே! இலக்கினை அடையும் வரை வீரனுக்கு ஏது ஓய்வும், சோர்வும்! நம் இதயத்தின் தசையெல்லாம் புரட்சித் தலைவரின் அரசியல் பாடம் மட்டுமே.  நம் கண்முன் தெரிவதெல்லாம் புரட்சித் தலைவி அம்மாவின் பூமுகம் தான்.

நம் இலக்கு புரட்சித் தலைவியின் பொற்கால அரசை மீண்டும் அமைப்பதும், எதிரிகளால் இருள் சூழ்ந்திருக்கும் தமிழ் நாட்டை ஒளிமயமான பொன்னுலகிற்கு இட்டுச் செல்வதாக மட்டுமே இருக்கிறது. வேறு எந்த சிந்தனையும் நம் மனதில் ஏற்படத் தேவையில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதிலும்; நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து, தமிழ் நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதிலும், யாருக்கும், எப்போதும், எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags: Admknewsjஅதிமுகஅறிக்கைஎடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்
Previous Post

போலீஸின் மகளிடமே சில்மிஷம் – போக்ஸோவில் கைதான இளைஞர்

Next Post

வைஃபை டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? – தவறவிட்டால் பணம் பறிபோகும் எச்சரிக்கும் போலீசார்!

Related Posts

அறிஞர் அண்ணா நினைவுநாள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்!
அரசியல்

அறிஞர் அண்ணா நினைவுநாள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்!

February 3, 2023
ஈரோடு கிழக்கு அதிமுகவின் கோட்டை!
அரசியல்

ஈரோடு கிழக்கு அதிமுகவின் கோட்டை!

February 3, 2023
இடைக்கால பொதுச்செயலாளருடன் அண்ணாமலை சந்திப்பு!
அரசியல்

இடைக்கால பொதுச்செயலாளருடன் அண்ணாமலை சந்திப்பு!

February 3, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு !
அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு !

February 2, 2023
அதிமுக ஆட்சியில் கிடைத்த 90 சதவீத நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை !
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் கிடைத்த 90 சதவீத நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை !

February 1, 2023
அதிமுகவுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது!
அரசியல்

அதிமுகவுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது!

February 1, 2023
Next Post
வைஃபை டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? – தவறவிட்டால் பணம் பறிபோகும் எச்சரிக்கும் போலீசார்!

வைஃபை டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? - தவறவிட்டால் பணம் பறிபோகும் எச்சரிக்கும் போலீசார்!

Discussion about this post

அண்மை செய்திகள்

தளபதி 67 – ‘லியோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!

தளபதி 67 – ‘லியோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!

February 3, 2023
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

February 3, 2023
பல கோடி வரி.. ஏஆர்ஆர், ஜிவி-க்கு செக்!

பல கோடி வரி.. ஏஆர்ஆர், ஜிவி-க்கு செக்!

February 3, 2023
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

February 3, 2023
சுங்கச்சாவடி கட்டணம்.. வசூல் அமோகம்..எத்தனை கோடி தெரியுமா?

சுங்கச்சாவடி கட்டணம்.. வசூல் அமோகம்..எத்தனை கோடி தெரியுமா?

February 3, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version