80000 கடனுக்காக திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி பாலியல் தொல்லை….

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கணவன் வாங்கிய கடனுக்காக, திமுக நகரச் செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

குருக்களையன்பட்டியைச் சேர்ந்த சக்திவேல், திமுக நிர்வாகியான பழனிச்சாமி என்பவரிடம் விவசாயத்துக்காக 80ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சக்திவேல் இறந்ததால், அவரது மனைவி காளீஸ்வரியிடம் கடன் தொகையைக் கேட்டு பழனிச்சாமி நேரிலும், போனிலும் ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும், தமக்கு பாலியல் தொல்லை அளித்தாகவும், பாதிக்கப்பட்ட காளீஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். கடனை விட இரண்டு மடங்கு பணம் கட்டியும் இன்னும் பணம் தரவேண்டும் என்று கூறி மோசமான நடவடிக்கைகளில் திமுக நிர்வாகி ஈடுபடுவதாக, அவர் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட செய்தியை பாதிக்கப்பட்டவரின் பேட்டியுடன், காட்சிப்பதிவு வடிவமைப்பில் காண கீழே உள்ள YOUTUBE-பிரிவில் உள்நுழையுங்கள்…

??⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬????⤵⤵↕↕⬇⬇⏬⏬??

Exit mobile version