ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றியை பெரும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பணிக்குழுவினருடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாதவரம் மூர்த்தி, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புரட்சித் தலைவர் காலத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது போல், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளதென்றும், இந்த வெற்றி சரித்திரத்தில் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version