‘ஆன்லைன் டிரேடிங்’ பல கோடி ரூபாய் மோசடி..!கல்லூரி மாணவர் கைது!!

ஈரோட்டில் இணையவழி வர்த்தகம் மூலம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, கல்லூரி மாணவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த பார்மசி கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகரை சேர்ந்த வைரமுத்து பாலாஜி என்ற மாணவர் ஈரோட்டில் உள்ள பார்மசி கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் படிக்கும் மாணவர் சஞ்சய், ஆன்லைன் டிரேடிங் மூலம் 40 நாட்களில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை, நம்பிய வைரமுத்து 49 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சஞ்சய்யிடம் கொடுத்துள்ளார். ஆனால் 40 நாட்களுக்கு மேலாகியும் பணம் தராமல் சஞ்சய் இழுத்தடித்துள்ளார். இதேபோல், 20க்கும் மேற்பட்ட மாணவர்களிடமும் டிரேடிங் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளார். இதையடுத்து, வைரமுத்து பாலாஜி பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததையடுத்து, சஞ்சயை போலீசார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version