ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் -அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்களிடம் குறைகள் இருப்பதைப் பெற்றோர்கள் சுட்டிக் காட்டினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நீங்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை,விரைவில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version