அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – தேர்தல் பணிக்குழு தலைவர் செங்கோட்டையன் தகவல்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரியார் நகர் பகுதியில் தேர்தல் பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.விஜயபாஸ்கர், சோமசுந்தரம், பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, பவுன்ராஜ், வாலாஜாபாத் கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

Exit mobile version