ஈரோடு கிழக்குத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. வாக்காளர்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று ஜனநாயக கடைமை ஆற்றி வருகிறார்கள். முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவிற்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் மறைவினையொட்டி இடைத்தேர்தலானது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. அதிமுக சார்பாக கழக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்கள், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் களமிறங்கியுள்ளார்.

Exit mobile version