ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது – கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுக இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு திமுக எனும் விடியா அரசின் அராஜகம்தான் காரணம். வாக்காளர்களை ஆடுகளை பட்டியலில் அடைத்து வைப்பதுபோல அடைத்து வைத்து பணம், கொலுசு, சிக்கன் பிரியாணி, குங்கும சிமிழ், குக்கர் போன்ற அனைத்து பரிசுப்பொருட்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது. முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிரச்சாரத்திற்கு வரும்போது அவருக்கு கூட்டம் கூடக்கூடாது என்பதற்காக, அவரை காண்பதற்கு செல்லாமல் இருப்பதற்கு ஆளுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்தார்கள் விடியா அரசினர். ஜனநாயக ரீதியில் எந்தவித குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடாத அதிமுகவினை பணநாயகத்தின் பேரில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது திமுக. இதனையொட்டி அதிமுகவின் ஈரோடு கிழக்கு வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் பேசுகையில் இந்தத் தேர்தலில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது என்று கூறினார்.

Exit mobile version