இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றது – ஜி.கே.வாசன்!

தமிழ் மாநில காங்கிரசின் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் தான் வென்றுள்ளது என்று கூறினார். மேலும் பேசிய அவர் ஈரோடு தேர்தலில் பணம்தான் விளையாடியது என்பது ஊரே அறிந்த ஒரு உண்மை என்று பேசினார்.

காங்கிரசிற்காக அவர்களின் கட்சியினர் களத்தில் இறங்காமல் கூட்டணிக் கட்சியான திமுக களத்தில் இறங்கி மக்களை பட்டியில் அடைத்து வைத்து பட்டி பார்முலா என்ற புதிய ஒன்றினை அறிமுகப்படுத்தி பணத்தால் வென்றுள்ளார்கள். கொலுசு, சிக்கன், குக்கர், பணம் என்று மக்களை ஏமாற்றிப் பல பரிசுப்பொருட்களைக் கொடுத்து வாக்கை சேகரித்துள்ளார்கள்.

Exit mobile version