30-ம் தேதிக்குள் அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்!!

1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தங்கள், ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், ரோட்டரி சங்கத்தின் சார்பில் 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில், புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மணிக்கூண்டை திறந்து வைத்து, ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 30-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்படும் என்றார்.

Exit mobile version