சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண்

சமூகப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சமூக பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு மாணவனும் 5 மரங்களை வளர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version