தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரசாரத்தை புறக்கணித்த கிராம மக்கள்

நெல்லை கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற தென்காசி தொகுதி சுயேட்சை வேட்பாளர் பிரசாரத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.

கடையநல்லூர் தாலுகாவை சுற்றியுள்ள வீரசிகாமணி, அரியநாயகிபுரம், அருணாச்சலபுரம், பெரியசாமிபுரம், திருவேட்டநல்லூர் போன்ற கிராமங்களில் டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற தென்காசி தொகுதி சுயேட்சை வேட்பாளர் பொன்னுதாய் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்குக்கேட்டு சுயேட்சை வேட்பாளர் சென்ற போது கிராம மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பிரசாரத்தை புறக்கணித்தனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Exit mobile version