தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்தவர்களுக்கு அவமானமே நிகழ்ந்தது: கல்லூர் வேலாயுதம்

டி.டி.வி தினகரனை நம்பி அமமுகவில் சேர்ந்த தங்களுக்கு அவமானம் மட்டுமே நிகழ்ந்ததாக, அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ள, கல்லூர் வேலாயுதம் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுகவிலிருந்து அனைவரும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்புகின்றனர் என்றும், இதன் ஒரு பகுதியாக தென்காசியில் வரும் 6ம் தேதி, தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைகின்றனர் என்றும் கூறினார்.

Exit mobile version