டிடிவி தினகரன் அரசியலில் சர்வாதிகாரத்தை பின்பற்றுகிறார்: கலைச்செல்வன்

சர்வாதிகாரத்தைப் பின்பற்றுகிற அமமுகவின் தினகரன் அரசியலை விட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தினகரன் சர்வாதிகார அரசியல் செய்வதாக குறிப்பிட்டதோடு அரசியலில் இருந்து தினகரன் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர் என்றும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சரை சந்தித்த நிலையில் தற்போது கலைச் செல்வன் தமிழக முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களாக கருதப்பட்ட பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் மூவரும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பதால் தமிழக அரசியலில் தினகரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version