கூடாரம் காலியாகி வருவதால் விரக்தியில் தினகரன்… வேலூரில் அமமுக போட்டியில்லை…

கூடாரம் காலியாகி வருவதால் விரக்தியில் ஆழ்ந்துள்ள தினகரன், வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனின் அமமுக படுதோல்வி அடைந்தது. தினகரனின் தன்னிச்சையாக முடிவுகள், நிர்வாகிகளை மதிக்காமல் உதாசீனப்படுத்துவது போன்ற செயல்கள் அமமுகவினரிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

இதன் காரணமாக பல நிர்வாகிகள் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தொடர்ச்சியாக அமமுக கூடாரம் காலியாகி வருவதால், தினகரன் செய்வதறியாது திகைத்து போயுள்ளார். இதன் எதிரொலியாக வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

Exit mobile version