நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமமுக திணறல்

நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று
கோரிய வழக்கை அமமுக வாபஸ் பெற்றது. ஹைட்ரா கார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அமமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து அமமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், நீங்கள் போராட்டம் நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள் என மனுதாரரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version