வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் அஞ்சலி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி. வேணுகோபால், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், நிர்வாகத்திறன் மிக்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு, நாட்டுக்கே பேரிழப்பு என்று தெரிவித்தார். 50 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து, நாட்டு மக்களுக்கு வாஜ்பாய், சிறப்பாக பணியாற்றியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

 

Exit mobile version