சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு நல்லெண்ண தூதர்களுக்கும் உரிமை உள்ளது: ஐ.நா

ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்ட்ட பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எழுதிய கடிதத்தை ஐ.நா. சபை நிராகரித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஜோனஸை நல்லெண்ண தூதராக ஐ,நா நியமித்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து பிரியங்கா சோப்ரா கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி, ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை நீக்கக்கோரி யுனிசெப்பிற்கு கடிதம் எழுதினார். அதில், பிரியங்கா சோப்ரா இந்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த அணுசக்தி அச்சுறுத்தலையும் ஆதரித்துள்ளதாகவும், கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கான உரிமை நல்லெண்ண தூதர்களுக்கு உள்ளது என்றும், அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் யுனிசெப்பின் நிலைப்பாடுகளை எப்போதும் கடைபிடிப்பார்கள் என்றும் கூறியுள்ள டுஜாரிக் பாகிஸ்தானின் கடிதத்தை நிராகரித்துள்ளார்.

Exit mobile version