தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

ஊழல் வழக்கில் சிறைத்தண்டணை பெற்றிருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஏஞ்சினர் என்ற நெஞ்சு வலி நோயால் அவதிப்பட்டு வந்தார். திடீரென்று நவாஸ் ஷெரீப்பின் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் ஆக குறைந்ததால் அவர் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு நவாஸ் ஷெரீப் வீடு திரும்பினார். ஆயினும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version