தொடர் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் அதிகளவில் சுற்றுலா வருவார்கள். பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அழகிய மலைவாழிவிடமான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதமான சூழலில் பூங்காக்களில் குடும்பத்துடன் இனிதே நேரத்தை கழித்து புத்துணர்ச்சிப் பெற்றனர்.

குழந்தைகளுடன் படகு சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். பிரையண்ட் பார்க், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் திரண்டு இயற்கை அழகை ரசித்தனர்.

Exit mobile version