கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 50-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து 50-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் 50-வது நாளாக இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தண்ணீர் வரத்து சீரானதும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version