குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் தண்ணீரின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் தொடர் விடுமுறை என்பதாலும், அரையாண்டு விடுமுறை என்பதாலும் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version