உலகச் சுற்றுலா தினம் – காஷ்மீரில் நடைபெற்ற படகுப் போட்டி

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநரில் உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் விதவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

உலகச் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வருபவர்களை கவரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாத் தொற்று காரணமாக அதிகம் பாதிப்பப்பட்ட சுற்றுலாத்துறை, பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகு இல்லத்தில் பல விதமான சவாரி போட்டிகள் நடத்தப்பட்டது.

மிதக்கும் உணவகங்கள் மூலம் சூடான உணவுகளும் வழங்கப்பட்டன.

Exit mobile version