காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டாம்: கேரள வனத்துறை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் காட்டு யானைகளின் அருகில் சென்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி மற்றும் மூணாறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிமாக உள்ளன. சாலைகளில் யானைகள் சுற்றித்திரியும் நிலையில், சுற்றுலா பயணிகள் வாகனத்தில் இருந்து இறங்கி, காட்டு யானைகளுக்கு அருகில் சென்று ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்கின்றனர்.

Exit mobile version