கும்பக்கரை அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Exit mobile version