இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 806 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசுக்கு 581 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது. 39 ஆயிரத்து 130 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 4 லட்சத்து 32 ஆயிரத்து 41 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 39 கோடியே 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரதுறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version