கொடியேற்றம் நடந்த நாளன்றே கோயில் உண்டியல் உடைப்பு – கொடைக்கானலில் பரபரப்பு

திண்டுக்கல் அருகே, கொடியேற்றம் நடைபெற்ற நாளன்றே மாதா கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பழமை வாய்ந்த மாதா கோயில் கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று அதிகாலை கோயிலுக்குச் சென்றபோது, கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உண்டியலின் அருகே அதனை உடைக்க பயன்படுத்திய கத்தி, சுத்தியல், சாவிக் கொத்துகள் உள்ளிட்டவை சிதறிக் கிடந்தன.

இது குறித்து கொடைக்கானல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ  இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், உண்டியலை உடைத்து கைவரிசை காட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக வெளியூரைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version