மூதாட்டிகளை குறிவைத்து திருடிய ஆட்டோ ராணிகளில் ஒருவர் கைது

சென்னையில் ஆட்டோவில் பயணிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து திருடிய பெண்களில் ஒருவரை, தீரன் பட பாணியில், தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஆட்டோவில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் கொள்ளையடித்த கொள்ளையர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பத்தில் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், தமிழக காவல்துறையினர் அங்கு விரைந்தனர். கொள்ளையர்கள் நிறைந்த பகுதி என்பதால், மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர், கொள்ளையடித்த பெண்களில் ஒருவரான அகிலா என்பவரை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே அதிரடியாக கைது செய்தனர்.

பின்பு, அகிலாவிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ===ஙஅந்த கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பலருக்கும் திருடுவதுதான் தொழில் என அவர் கூறியுள்ளார். இதற்காக கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி, தமிழகம் என 4 மாநிலங்களுக்கும் குழுக்களாக சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவருவதும் தெரியவந்தது. மேலும் 5 பெண்கள் தான் இந்த கொள்ளை பெண்களுக்கு தளபதிகளாக இருப்பதாகவும், அவர்களை வழிநடத்த தாதாவாக, வேலு மற்றும் சிவா ஆகியோர் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version