இருசக்கர வாகனங்களை திருடி OLX-ல் விற்ற இளைஞர் கைது

சென்னை அம்பத்தூரில், இருசக்கர வாகனங்களை திருடி OLX-ல் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார், 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அம்பத்தூர் பகுதியில் வீடு, கடைகள் முன்பு நிறுத்தபட்டிருக்கும் சக்கர வாகனங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவது குறித்து அம்பத்தூர் காவல்துறையினருக்கு வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், செங்குன்றம் நெடுஞ்சாலை, புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், இளைஞர் அம்பத்தூர் கிருஷ்ணம்மாள் தெருவை சேர்ந்த ஜோசப் என்பதும், தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களை திருடி, OLX மூலம் ஆன்லைனில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையனிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இளைஞரை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version