ஆங்கிலப் புத்தாண்டையொட்டி முதலமைச்சருக்கு, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். சிறந்த நல்லாட்சிக்காகத் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதற்குப் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத் தலைவர் வளர்மதி ஆகியோரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Exit mobile version