இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையின் கஸ்துர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் கர்நாடகாவில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் 104 பேருக்கும், வெளிநாட்டினர் 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version