மான் வேட்டை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது: நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மான் வேட்டை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் மீட்டனர்.

கடந்த சில நாட்களாக அந்தியூர் போலீசார் தனிப்படை அமைத்து மான்வேட்டை கும்பலை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அந்தியூரை அடுத்துள்ள ஈசப்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன், குருநாதன், பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து உரிமம் பெறாத 3 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் மூவரும் மான் வேட்டைக்கு சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ,கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version