ATM-ல் கொள்ளையடிக்க முயன்றவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தவரிடம் கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

சேரானூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மில் பெரியண்ணன் என்பவர் எடுத்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை கோவிந்தராஜ் என்பவர் பறித்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது, பொது மக்கள் அவரை மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கோவிந்தராஜூவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version