”கொள்ளைக்கு உதவிய தலைமை காவலர்”- போலீசார் வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், ஓய்வுபெற்ற அரசு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த 6 மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயகன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனியாக வீட்டில் வசித்து வரும் நிலையில், இவரது வீட்டிற்கு காரில் வந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து காரியாபட்டி போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், காந்திநகர் அருகே, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கோபிகண்ணன், ராஜபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் உள்ளிட்ட6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 88 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் காரையும் பறிமுதல் செய்த போலீசார், கொள்ளைக்கு காரணமாக இருந்த தலைமை காவலர் இளங்குமரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version