CCTV-2 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கம் வழிமறித்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி!!

கோவை வடவள்ளியில், இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து, 2 கிலோ தங்க நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது.

கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகம் என்பவர், தங்க நகைகளை ஹால்மார்க்காக மாற்றித் தரும் பணியை செய்து வருகிறார். சத்தியமங்கலித்திலிருந்து 2 கிலோ நகையை பெற்றுக் கொண்டு, பேருந்தில் கோவை வந்த சண்முகம், காந்திபுரத்திலிருந்து வடவள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் இரவில் சென்றுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபரக்ள் இருவர், அவரை தாக்கி, அவரிடமிருந்த 2 கிலோ நகை மற்றும் 7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சண்முகம் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கண்ட செய்தியின் cctv-காட்சிகளை காண

↕↕↕                                        ↕↕↕

Exit mobile version