"காவல்துறையின் அலட்சியத்தால் துணிகர கொள்ளை"

கோவை பீளமேடு அருகே போலீசாரின் அலட்சியத்தால், அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காளப்பட்டி பாலாஜி நகர் பகுதியில் வசித்துவரும் கிரிஸ்டோபர், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் மற்றும் சமையலறையில் இருந்த மளிகைப் பொருட்களை, மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதே போல் விளாங்குறிச்சி சாலையில் 5-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்தும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததாலேயே இதுபோன்று துணிகர கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Exit mobile version