வியாபாரி தாக்கியதில் சுருண்டு சாலையில் விழுந்த வாலிபர்: போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்புப் பகுதியில், சாலையோரத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து சில கடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நடந்து செல்பவர்கள் நடைபாதையில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், நடைபாதையில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரை, பூக்கடை வியாபாரி , கன்னத்தில் ஓங்கி அடித்த வேகத்தில் அந்த இளைஞர் நிலை தடுமாறி சுருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தாக்குதல் நடத்திய வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

Exit mobile version