60அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்!

கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தில், போதையில் இருந்த நபர், திடீரென சுமார் 60 அடி உயரத்தில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த நபரை மீட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஸ்டக்சரில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த 45 வயதான சிங் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version