வள்ளுவனை காண காத்திருக்கும் மக்கள்!

கன்னியாகுமரியில் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வந்ததால் சிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் சிலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version