அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி

கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியிருப்பதாக விளக்கம் அளித்தார். அணை பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை வேறு மாநிலத்தில் இருந்தால் அந்த அணையை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் கட்டுப்படுத்தும் வகையில் விதிகள் சேர்க்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய முதலமைச்சர், இதனால் முல்லைபெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழகத்தின் உரிமை பறிபோகும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version