துப்பாக்கியுடன் வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் பரபரப்பு

திருப்பத்தூரில், வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டதால் கத்தியால் குத்தி விட்டு முகமூடிக் கொள்ளையர்கள் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இராமநாதன் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். மரக்கடை அருகிலேயே இராமநாதன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி இராமநாதனை மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த ராமநாதன் கத்திக் கூச்சலிடவே கொள்ளையர்கள் அவரைக் கத்தியால் குத்தி விட்டுத் துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை அங்கேயே போட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த திருப்பத்தூர் காவல்துறையினர் காயமடைந்த ராமநாதனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை வரவழைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version