வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்

சென்னை போர் நினைவு சின்னம் அருகே அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர், அவ்வழியாக வந்த வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவரிடம் வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், வழக்கறிஞர் என்று கூறியும் ஏன் ஆவணங்களை கேட்கிறீகள் என கூறி உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார். இதில் ரத்த காயத்துடன் காவல் அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த விடியா அட்சியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version