கொடைக்கானலில் நீண்ட நாளுக்கு பிறகு பெய்த கோடை மழை

கொடைக்கானலில் நீண்டநாளுக்கு பிறகு பெய்த கோடை மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் சுற்றியுள்ள வனப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், பட்டா நிலங்களில் அடிக்கடி திடீரென காட்டு தீ ஏற்பட்டு விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் என தீயில் கருகி நாசமாகின.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இடியுடன் கூடிய கனமழை பெய்தது சுமார் 2 மணிநேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் .மேலும் சீசனை வரவேற்கும் விதமாக இந்த கோடை மழை அமைந்துள்ளது.

Exit mobile version